சிறப்புடைய இடுகை

மொழி, பண்பாட்டு வளா்ச்சியில் ‘வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம்’

மொழி , பண்பாட்டு வளா்ச்சியில் ‘ வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் ’ இரா . மணிகண்டன் XII- ஆ , இரா . விஷ்வா XII- அ , அ . உமா்ஃபார...

செவ்வாய், 17 ஜனவரி, 2017

இதழியல் பார்வையில் வீரமாமுனிவர் கலைஇலக்கிய மன்றத்தின் கலைப்பணிகள்

இதழியல் பார்வையில் வீரமாமுனிவர் கலைஇலக்கிய மன்றத்தின் கலைப்பணிகள்
அ. கரியமாணிக்கம் 11,
ஆ.குப்பமுத்து 11,
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி,
தேவகோட்டை.
முன்னுரை:
பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு வாழ்வியலாய் இணைந்திருக்கும் பண்பாட்டு விழுமியங்களை, கலைச் சிறப்பை கடந்த கால வரலாற்றின் வழி மீட்டுருவாக்கம் செய்து, நிகழ்காலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. நம் முன்னோர்களின் பண்பாட்டையும், மரபையும் பள்ளிப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்கு இருக்கிறது. அவ்வகையில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் தமிழர் பண்பாட்டையும், கலைகளையும் காக்க முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்து இதழியல் பார்வையில் இனி இக்கட்டுரை வழி காணலாம்.                                                                         
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்:
தேவகோட்டையில் தே பிரித்தோ மேனிலைப் பள்ளி 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பயின்றவர்களுள் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மேனாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், நீதியரசர் முருகேசன், ஆசிய தடகள தங்கப் பதக்க வீரர் சார்லஸ் புரோமியோ, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்ரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மலைச்சாமி, திரைப்பட நடிகரும், மேனாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். 1990 முதல் இப்பள்ளியில் இயங்கி வரும் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தில் தமிழாசிரிர்கள் திரு.ச.அமல்ராஜ், திரு.அ.பௌலியன்ஸ் ஆகியோர் செயலர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர். 2009 முதல் பட்டதாரிதமிழாசிரியர் திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இம்மன்றத்தின் தலைவராக தலைமையாசிரியர் பொறுப்பிலிருக்கும் இயேசுசபை அருட்தந்தையர் செயல்பட்டு வருகிறார்கள். தற்பொழுது இம்மன்றத்தின் தலைவர் அருட்திரு.வே.அகஸ்டின் ஜான்பீட்டர் சே.ச.ஆவார். ஆறு முதல் பன்னிரண்டு வகுப்பு வரை பயிலும் கலையாற்றலும், இலக்கிய ஆர்வமும் கொண்டுள்ள மாணவர்கள் இதன் உறுப்பினர்களாவர்.                

கலைவார விழா:
ஆண்டுதோறும் சு+லைத் திங்களில் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் கலைவார விழா ஒரு வாரம் முழுதும் திருவிழா போல கொண்டாடப் பெறும். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பிரிவுகளுக்கெனத் தனித்தனியே தனி நடனம், கிராமிய குழு நடனம், கிராமியப் பாடல், இசைக்கருவி வாசித்தல், பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், தனி நடிப்பு, குறு நாடகம், மௌன நாடகம், பயனற்ற பொருள்களிலிருந்து கலைப்பொருட்கள் தயாரித்தல், கையெழுத்து, பட்டிமன்றம், சமையல் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப் பெறும். முந்தைய ஆண்டுகளில் கலைத் திறன்களில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைவாரத் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து, குத்துவிளக்கேற்றி வைக்கும் மதிப்பான வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிறைவு விழாவில் முதல் மூன்றிடங்களை வென்ற மாணவர்களுக்கு கலைத்துறை சாதனையாளர்கள் மூலம் பரிசுகள் அளிக்கப் பெறும்.

கலைப் போட்டிகள்:  
காந்தியன் சமுதாய கிராம சங்கமும், தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்தும் கலைப் போட்டிகளையும் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளையும் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.

கலை இலக்கியப் பயிலரங்கம்:
பழந்தமிழர்களின் வாழ்க்கைமுறை, நாரிகம், பண்பாடு ஆகியனவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு தொன்மைப் பாதுகாப்பு மன்றத்துடன் இணைந்து பழங்காலப் பொருட்களை சேகரித்து கண்காட்சி நடத்திவருகிறது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் கருத்தரங்குகளில் மாணாக்கரைப் பங்கேற்கச் செய்தும், பண்பாட்டு புழங்கு பொருட்கள் கண்காட்சியில் ஈடுபடச் செய்தும் வருகிறது.
முன்னாள் மாணவர் மன்றத்துடன் இணைந்து தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கவியரசர் முடியரசனார் பிறந்த விழா, மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா ஆகிய விழாக்களை முன்னிட்டு ஒரு நாள் கலை இலக்கியப் பயிலரங்கம் நடைபெற்றது. பாரதியார் அரங்கம், பாரதிதாசன் அரங்கம், முடியரசன் அரங்கம் ஆகிய அரங்குகளில் பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட கலைகளை வளர்த்தெடுக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன (தினமணி, 16.10.2016 ,தினத்தந்தி, 16.10.2016)                                          
கிராமியக் கலை நடனங்கள்:
2013, 2016 ஆண்டுகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை விழாக்களில் ‘தொன்மங்களின் தோரணம்’ என்ற தலைப்பில் கயிறுநடனம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடனங்களை வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்ற மாணவர்கள் மேடையேற்றி வருகின்றனர் (ஆண்டுவிழா ஆண்டறிக்கை, 2012-13 ப.8) தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய கிராமிய நடனப் போட்டியில் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் இவ்வாண்டு கரகாட்டம் ஆடி முதல் பாpசு வென்றனர்.
கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், சிலா ஆட்டம், களியல் ஆட்டம், சக்கைகுச்சியாட்டம், வெசில் ஆட்டம் ஆகிய பல்வேறு கிராமிய நடனங்களை ஆசிரியர்கள் திரு.லூ.ஜஸ்டின் பிரபாகரன், திரு.சு+.ரிச்சர்டு ஆகியோர் கற்றுத்தருகின்றனர். 

கவிதைக்கலை:
கலை இலக்கியப் பயிலரங்கில் மரபுக் கவிதை, புதுக்கவிதை நறுக்கு ஆகிய கவிதைகள் எழுத பயிற்சியளிக்கப்படுகிறது. ராஜ் தொலைக்காட்சியின் ‘புதியதோர் கவிஞன் செய்வோம்’ நிகழ்ச்சியில் இலக்கிய மன்றச் செயலர் ம.ஸ்டீபன் மிக்கேல்ராஜ், மாணவர் சுப.மணிமாறன் கவிதை பாடியுள்ளனர். கோவை தமிழ்ச்சங்கம் நடத்திய உலக சாதனைக் கவியரங்கில் கலை இலக்கியமன்ற மாணவர்கள் உலகப்பன், சந்திர சேகர், ஸ்டீபன், மணிமாறன் பங்கேற்று கவிதை வாசித்தனர் (தினத்தந்தி, 22.12.2011) 
காரைக்குடியில் வள்ளுவர் பேரவை நடத்திய லிம்கா சாதனைக் கவியரங்கில் இம்மன்றத்தின் சார்பில் இருபது மாணவர்கள் பங்கேற்று கவிதை வாசித்தனர். (சுட்டி விகடன் 15.11.20101, ப.57)
பள்ளியின் 69 ஆம் ஆண்டு விழாவில் இலக்கிய மன்ற மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் ‘மொட்டுகளின் வாசம்’ என்னும் நூலாக வெளியிட்டது. பல்வேறு பத்திhpகைகள் பாராட்டி கட்டுரை வெளியிட்டன, அவற்றுள் சில:
*‘சதா சர்வ காலமும் மாணவர்களை புத்தகத்துக்குள் முடக்கிப் போடுகிற பள்ளிகள், ஒரு எட்டு தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று பாடம் படித்துவிட்டு வர வேண்டும். மாணவர்களை படிப்பாளியாக மட்டுமின்றி படைப்பாளியாகவும் மாற்றுகிற அரும்பணியைச் செய்கிறது. ‘வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்’ என்ற பெயாpல் ஒரு இலக்கியப் படை இங்கு இயங்குகிறது. புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுகதை என்று பல பாpமாணங்களில் கலக்கி பாகசுகளையும், விருதுகளையும் குவிக்கும் மாணவர்கள் கவியரங்கங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்துகிறார்கள். ஜனரஞ்சக இதழ்கள் மட்டுமன்றி சிற்றிதழ்களிலும் எழுதிக்குவிக்கிறார்கள். 
மாணவர்களின் மொட்டுகளின் வாசகம் என்ற நூலில் குறுகத்தாpத்த குறள்போல கருத்தை ஈர்க்கின்றன கவிதைகள் (குங்குமம், 19.11.2012, பக்.84,85)
* ஒரே பள்ளி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் மாநில அளவில் புதிய முயற்சியாக வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் வெளியிட்டதை ‘கல்விச் சுரங்கம்’ பாராட்டி மகிழ்கிறது. (கல்விச் சுரங்கம், நவம்பர் 2012, ப.37)
* ஆண்டு விழாவென்றால் சினிமாப் பாடல்களைப் போட்டு நடனமாடவைத்து வேடிக்கை பார்ப்பதைவிட இது போன்று ஆக்கபு+ர்வமாக மாணவர்களை ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் செயல்பட வைத்தால் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியுமென்பதற்கு தே பிரித்தோ மேனிலைப்பள்ளி முன்னுதாரணமாய்த் திகழ்கிறது. (இனிய நந்தவனம், டிசம்பர் 2012)
மனித அழிமானத்திற்கான எல்லா விதமான கூறுகளும் தலையெடுக்கத் துவங்கிவிட்ட இந்தத் துயரம் நிரம்பிய காலகட்டத்தில் அரவமின்றி மாணவர்களை ஆகச்சிறந்த சமூக சக்திகளாய் உருமாற்ற வழிகாட்டியும், திறன் ஊட்டியும் வளர்த்தெடுக்கும் பணியைச் செய்கின்ற தே பிரித்தோ மேனிலைப்பள்ளி தம் எதிர்கால வரலாற்றை இன்றே மாணவ உளிகொண்டு எழுதிக் கொண்டிருக்கிறது. இது எக்காலத்தையும் விஞ்சி நிற்கும் தான். (புத்தக மதிப்புரை - கவியோவியத் தமிழன் - சுழல், ஏப்ரல் 2013, ப.05) 

கடிதம் - கட்டுரை -சிறுகதை:
கடிதக்கலை பற்றிய சிறப்புகளை மடல் என்னும் சிற்றிலக்கியத்திலும், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்கள் மூலமாகவும் அறிய முடிகிறது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப யுகத்தில் கடிதமெழுதுவது அருகிவரும் சு+ழலில் மாணவர்களுக்குக் கடிதமெழுதக் கற்றுத்தருகிறது வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம். 
கடிதமெழுதும் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் இலக்கியமன்ற மாணவர்கள் வாகை சு+டியுள்ளனர். ‘என் கனவு ஆசிரியர்’ என்னும் தலைப்பிலான கடிதப் போட்டியில் அ.ரியமாணிக்கம் முதலிடம் வென்றுள்ளார் (தினமலர், பட்டம், 10.10.2016, ப.7)
கவின்கலைகளுள் கட்டுரையும் ஒன்று. பத்திரிகைகளுக்கு வரலாற்றுக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, நேர்காணல் கட்டுரை போன்ற கட்டுரைகளை மாணவர்கள் எழுதி வருகின்றனர்.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகம் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில் சி.சேதுராஜா முதல் ரிசு வென்றுள்ளார் (தினமணி, 04.11.2013, தினமலர் 06.11.2013) பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கட்டுரைப் போட்டியில் ஆ.குப்பமுத்து, தி இந்து தமிழ் நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் சு+.ஆரோக்கியஜெகன் (தி இந்து, மாயாபஜார், அக்டோபர் 21,2015) ரிசு பெற்றுள்ளனர். 28.11.2016 அன்று கோவையில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் 12 மாணவர் சிவசுப்பிரமணியன் இரண்டாம்  ரிசினை பள்ளிக்கல்வித்துறை இயக்குடம் பெற்றுள்ளார்.
சிறுகதை எழுத இலக்கிய மன்றத்தின் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. கலை இலக்கிய மன்ற மாணவர்கள் எழுதிய சிறுகதைகள் பல்வேறு பத்திhpகைகளில் வெளியாகியுள்ளன. சுட்டி விகடன் மாணவ நிருபர் சித.உலகப்பன், எம்.ஆண்டனி ஜாக்சன் ஸ்ரீதர் ஆகியோர் சிறுகதைகள் (சுட்டி விகடன் 31.10.2010, ப.58) இவ்வாண்டுக்குhpய சுட்டி விகடன் மாணவ நிருபர் ஆ.பாஸ்டின் ஜோயல் சிறுகதை (சுட்டி விகடன் 29.02.2016, ப.62,63) ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் ம.ராகுல், து.தேவராஜ் சிறுகதைகள் வெற்றி பெற்று பரிசு வென்றுள்ளன (தினமலர், பட்டம், 11.04.2016)

ஓவியக்கலை:
கலைவார விழாவில் ஓவியப்போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஓவிய ஆசிரியர்கள் திரு.ஜா.சேவியர், திரு.ஜா.பு+ண்டி ஜெயராஜ் ஆகியோரைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. 
2016-17 கல்வியாண்டில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய ஓவியப் போட்டியிலும், பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளிலும் ஜ.பெர்னால்டு ஜார்ஜ் ராஜ் முதல் பாpசினை வென்றுள்ளார்.
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலர் திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் எழுதிய ‘மாடல்ல மற்றை யவை..’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு அட்டைப்படம், பதினாறு சிறுகதைகள் உள்ளிட்ட பதினேழு ஓவியங்களை கலை இலக்கிய மன்ற மாணவர்களே வரைந்துள்ளனர். (ஆனந்த கங்கைத்தூது, மார்ச் 2015)
மாநில அளவில் சிறந்த ஓவியங்களாகத் தேர்வு செய்யப்பட்ட எட்டு ஓவியங்களில் நான்கு ஓவியங்கள் இம்மன்ற மாணவர்களுடையவை. (பாவையர்மலர், செப்டம்பர் 2015, ப.44.45)

இதழியல்கலை:
இதழியல் கலை குறித்த வகுப்புகளும் கலை இலக்கிய மன்றத்தின் மூலம் நடத்தப் பெறுகின்றன. விகடன் இதழ் குழுமத்தின் சிறார் இதழான சுட்டி விகடன் பத்திhpகையில் சித.உலகப்பன் (2010), வீ.குமாரவேல் (2011), செ.தீபக்ராஜா (2012), ச.சிவசுப்பிரமணியன் (2013), இரா.விஷ்வா (2015), ஆ.பாஸ்டின் ஜோயல் (2016) ஆகிய மாணவர்கள் மாநில அளவில் சுட்டிவிகடன் மாணவ நிருபர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வீரமாமுனிவர் கலை இலக்கியமன்றச் செயலரை பொறுப்பாசிரியராகக் கொண்டு ‘சுழல்’ என்னும் சிற்றிதழ் ஆசிரியர்களால் நடத்தப்பெற்றது. அதனை முன்னோடியாகக் கொண்டு மாணவர்களும் சிற்பிகளின் விதை, பேனா முனை, சமூகமே எந்திரி ஆகிய இதழ்களை நடத்தினர். இலக்கியப் போட்டிகள் இல்லாத காலத்திலும் அதற்கான தயாரிப்புகளைத் தொடர்ந்து வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் செய்து வருகிறது, (புதியதலைமுறை 02.10.2014, ப.62,63) இதனைப் பாராட்டி இலக்கிய மன்றச் செயலர், மாணவப் பத்திhpகையாசிரியர்களின் நேர்காணலை புதியதலைமுறை வார இதழ் ‘ஏடு கொண்டானடி பள்ளியிலே..’ என்னும் இருபக்கக் கட்டுரையாக வெளியிட்டது.
சுழல் இதழில் மாணவர்களின் படைப்புகளுக்கு தனியிடம் ஒதுக்கியிருப்பது குறித்து ‘மாணவர்களின் படைப்புகளுக்கு ‘சுழல்’ களம் அமைத்துத் தருவது வரவேற்கத்தக்கது’ (குங்குமம், 29.10.2012, ப.84) என்று குங்குமம் இதழ் பாராட்டியுள்ளது.
‘காக்கைச் சிறகினிலே..’ இலக்கிய இதழ் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் இதழ்ப் பணிகளைப் பாராட்டி மூன்று பக்கங்களில் ‘வீட்டுக்கு ஒரு மரம், பள்ளிக்கு ஒரு இதழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. (காக்கைச் சிறகினிலே, சனரி 2014, ப.3-6)
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகள், நூல் வெளியீடுகள், இதழ்ப்பணி, மொழிவள ஆய்வு மையம் குறித்து எழுத்தாளர் வி.சி.வில்வம் ‘உண்மை’ மாத இதழிலும் தம் நூலிலும் கட்டுரை எழுதியுள்ளார் (கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க, கியு+பா பதிப்பகம், ப.20-23)

பேச்சுக்கலை:
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், வலம்புரி ஜான் உள்ளிட்ட மறைந்த தமிழறிஞர்களின் உரைகளையும், வாழும் தமிழஞர்களின் பேச்சுகளையும் குறுவட்டு மூலம் மொழிவள ஆய்வு மையத்தில் மாணவர்களைக் கேட்கச் செய்து பயிற்சியளிக்கிறது இவ்விலக்கிய மன்றம்.
பேச்சுக்கலையின் முக்கூறுகளான எடுத்தல், தொடுத்தல், முடித்தல் ஆகியவற்றில் திறனை வளர்த்துக் கொள்ள பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாநில அளவிலான தேம்பாவணி பேச்சுப் போட்டியில் மு.இராகவேந்திரன், இரா.விஷ்வா ஆகியோர் முதலிடம் வென்றுள்ளனர். சன் தொலைக்காட்சியின் ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சியில் இருவர், ராஜ் தொலைக்காட்சியின் ‘அகட விகடம்’ நிகழ்ச்சியில் நால்வர், கலைஞர் தொலைக்காட்சியின் ‘நல்லாப் பேசுங்க… நல்லதையே பேசுங்க..’ நிகழ்ச்சியில் இருவர், கேப்டன் தொலைக்காட்சியின் ‘அசத்தல் அரங்கம்’ நிகழ்ச்சியில் இருவர், ஜெயா தொலைக்காட்சியின் ‘மக்கள் அரங்கம்’ நிகழ்ச்சியில் ஒருவர் என மாணாக்கர் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பண்பாடு, கலைகளுக்கு அரண் சேர்க்கும் வகையில் பேசியுள்ளனர். (காண்க: https://www.youtube.com/channel/UClgEtYEXYNMhIyFcz-eTSKA
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் மாநில அளவில் சிறப்பாகப் பேசி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இரா.மணிகண்டன் என்னும் கலை இலக்கியமன்ற மாணவர் பாராட்டு பெற்றுள்ளார். (முரசொலி, மதுரை 08.02.2016, ப-9) கவியரசர் முடியரசனார் அவைக்களம் நடத்திய மாவட்ட பேச்சுப் போட்டியிலும், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி நடத்திய மாநிலப் போட்டியிலும், தமிழ் வளர்ச்சித்துறை மாவட்ட பேச்சுப் போட்டியிலும் இவ்வாண்டு (2016) முதல் பரிசு வென்றுள்ளனர்.

நூல் வெளியீடுகள்:
* மேடை நமதே..(அரியவை நூறு:தொகுப்பு நூல்) - திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
*சுழல் சிற்றிதழ்- தே பிரித்தோ மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் (பொறுப்பாசிரியர்-திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்)
*உளிகள் வடித்த துளிகள்(கட்டுரை நூல்)- தே பிரித்தோ மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள்(பொறுப்பாசிரியர்-கவிஞர்.L.பிரைட்)
*சமூகமே எந்திரி- பதினோராம் வகுப்பு மாணவர்களின் சிற்றிதழ்
*பேனா முனை- பத்தாம் வகுப்பு மாணவர்களின் சிற்றிதழ்
*வேர்களே விழுதாகி.. - அருட்திரு.Y.S.யாகு சே.ச (மேனாள் தலைமையாசிரியர் & வீரமாமுனிவர் கலை இலக்கியமன்றத் தலைவர்)
*பாப்பா பாடும் பாட்டு (குழந்தைப் பாட்டிலக்கிய நூல்)- கவிஞர் L.பிரைட் (பட்டதாரி அறிவியல் ஆசிரியர்) சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசை அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் பெற்ற நூல்.
*மாடல்ல மற்றை யவை..( சிறுகதை நூல்)- திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (16 கதைகளுக்கான ஓவியங்களும், அட்டைப்படமும் இலக்கிய மன்ற மாணவர்களால் வரையப்பட்டவை)


கலை விருதுகள்:
மாநில அளவிலான கலைத்திறன் சாதனைகளுக்காக சேலம் இலக்கிய அமைப்பு ‘கலைச் சுடர்’, ‘நட்சத்திர ஆசிரியர்’ விருதுகளை வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் அவர்களுக்கு கலைமாணி எஸ்.பி.முத்துராமன், தேசிய விருதாளர் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் ஆகியோர் மூலம் வழங்கி கௌரவித்துள்ளது (கல்விடுடே, ஆகஸ்டு 2015, ப.37). இதே போன்று 23.10.2016 அன்று மதுரையில் டாக்டர் அப்துல்கலாம் கனவு வளர்ச்சி அறக்கட்டளையினர் கலாம் பிறந்த நாள் விழாவில் இம்மன்றத்தின் கலைப் பணிகளைப் பாராட்டி மன்றச் செயலருக்கு ‘கலாம் கனவு ஆசிரியர்’ விருதினை வழங்கியுள்ளனர். 

முடிவுரை:
மேற்கத்திய கலாச்சார மோகத்தில் மூழ்கி விடாமல் நமக்கேயுhpத்தான பழம்பெருமைகளை பண்பாட்டுச் செழுமையை, கலைச் செல்வங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பினை பள்ளிக் கூடங்கள் ஏற்றுக் கொண்டு, மாணாக்கர் உள்ளத்தில் பதியச் செய்ய வேண்டும். வருங்கால சந்ததியினரான மாணாக்கர் தமிழர் மரபையும், பண்பாட்டையும், கலைகளையும் காப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்கு ‘வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்’ போன்ற கலை இயக்கங்கள்; ஒவ்வொரு பள்ளியிலும் வளர்ந்து செழித்தோங்கிடவேண்டும்.   


கவியரசர் முடியரசனாரின் தமிழ் முழக்கத்தில் கலைநுட்பங்கள்
இரா.மணிகண்டன் 11
இரா.விஷ்வா 11
கவியரசர் முடியரசனார் அவைக்களம்,
தே பிரித்தோ மேனிலைப்பள்ளி,
தேவகோட்டை.
முன்னுரை:
கவியரசர் முடியரசனார் தமிழர்களின் கலைப் பண்பாட்டை மீட்டெடுக்க தம் கவிதை வாளைச் சுழற்றிய வீரர் ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரெனும் ஆள்க எனத் துஞ்சாமல் தாய்மொழியின் ஆட்சிக்கும், தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய பாவலர் அவர். 13 கவிதை நூல்கள், 4 காப்பிய நூல்கள், 2 சிறுகதை நூல்கள், 5 கட்டுரை நூல்கள், 1 சிறுகதை நூல் என தம் படைப்புகள் அனைத்திலும் தமிழர் மரபையும், பண்பாட்டையும் காத்திடும் வகையில் மொழிக்கலப்பு, பண்பாட்டுச் சீரழிவு, கலாச்சாரச் சீர்கேட்டிற்கு எதிராய்த் தம் வாழ்நாள் முழுதும் குரலெழுப்பியவர் கவியரசர் முடியரசனார் ஆவார். அரின் கவிதை நூலான ‘தமிழ் முழக்கம்’ நூலில் காணலாகும் கலை நுட்பங்கள் குறித்து இனி இக்கட்டுரையில் காணலாம்.
தமிழ் முழக்கம்:
கவியரசர் முடியரசனார் 1945 முதல் 1980 ஆண்டுகளுக்கிடையே பங்கேற்ற கவியரங்கக் கவிதைகளில் முடியரசனார் தலைமையேற்று முழங்கிய கவிதைகள் மட்டும் தனியே தொகுத்து ‘தமிழ் முழக்கம்’ என்னும் தலைப்பில் முடியரசனாரின் மறைவிற்குப் பிறகு அவரது மூத்த மைந்தர் பாரி முடியரசன் வெளியிட்டுள்ளார். தமிழ் வாழ்த்தோடு சேர்த்து 19 கவியரங்கக் கவிதைகளை உள்ளடக்கியது இந்நூல். 
பாட்டுக் கலை:
தமிழ் முழக்கம் நூலின் தொடக்கமே பாட்டுப் பறவைகள், குயில் பாட்டு என பாடல் குறித்த கவிதைகளாக அமைந்துள்ளன. 
‘பாட்டுப் பறவைகள்’ என்னும் தலைப்பிலமைந்த கவிதைகள் தமிழ்த்தாயை ‘மணிவிளக்கே, தெய்வதமே, எழில் விளக்கே, எழில்மயிலே, பு+ங்குயிலே, நற்றாயே, செழுங்கனியே, யாழிசையே, அமுதசுரபியே, படரொளியே, கவிநலமே, காhpகையே, போர் முரசே, குறவஞ்சியே, மானிடமே, செந்தமிழே, தேன் சுவையே, தௌ;ளமுதே என்று தமிழ்த்தாயின் புகழ்பாடி தாள் பணிந்ததாகக் குறிப்பிடும் கவிஞர் 
பாடு மகனேநீ பாடடா என் புகழை
நீடுதுயில் நீங்கி நிமிர்ந்தெழுந்து பாடடா ;
கேடு தொலைந்ததெனக் கீழ்வான் சிவந்ததென
நாடு சிறந்ததென நாளும்நீ பாடடா ;
வானிற் பறந்துவந்து வட்டமிட்டுப் பாருலகை
மேனின்று பாரடா மேன்மை எல்லாம் பாடடா
(பாட்டுப்பறவைகள், 75-80)
என்று பாட்டுப்பறவை தன்னை தமிழ்த்தாய் பாட அழைத்ததாகக் கவிஞர் பாடுகிறார்.
‘குயில் பாட்டு’ என்னும் கவிதையில் பாரதியாரின் குயில் பாட்டைப் பாடுகிறார்.
‘மாஞ்சோலை வான் கிளையில் வண்ணக் குயிலிருந்து 
தீஞ்சுவையிற் பாடுந் திறந்தினைத்தான் செப்புவனோ?
இன்ப வெறியேறி ஏக்கம் மிகவாகித்
துன்பங் கலந்திருக்கத் தோகைக் குயில்பாடும்
பாட்டின் இயல்பைத்தான் பாடுவனோ?’ (குயில்பாட்டு, 17-21)

என்று குயில் பாட்டின் இன்பத்தைப் புகழ்கிறார்.
‘தென்னாட்டுக் கலைகள்’ என்னும் தலைப்பிலான கவிதையில் தமிழிசைக் கலையின் தோற்றத்தைக் குறித்துப் பாடும் கவிஞர்
‘காட்டில் வளர் மூங்கிலிடைக் கார்வண்டு போய்த்துளைத்த
தோட்டில் நுழைகாற்றுத் தோற்றுவித்த நல்லிசையைக் 
கேட்டான் மனங்களித்தான் ; நாடோறும் கேட்பதற்கு
வேட்டான், எடுத்தான் வெதிரைத் துளைத்தான்
குழல்கண்டான் ; வாயைக் குவித்திசையை ஊதிப் 
பழகி இனிதாக்கிப் பாருக் களித்தவன் யார்?
வேட்டைக் குதவிவரும் வில்லெடுத்து நாண்தொடுத்துப் 
பு+ட்டித் தெறித்தான் புதிய ஒலி கேட்டான் ;
விண்ண் ணெனஇசைத்த ஓசை வியப்பு+ட்டப்
பண்ண் ணிசைக்கும்யாழ் பண்ணி நமக்களித்தான் ; 
வேட்டை யளித்த விலங்கினத்தின் தோலுhpத்து 
மேட்டில் உயர்மரத்தில் வீசி எறிந்துவிட்டான்
காய்ந்தெழுந்த தோலிடத்துக் காற்றால் சிறுகொம்பு
தோய்ந்து தோய்ந் தாடுவதால் தோன்றியதோர் பேரோசை
அன்றே படைத்தான் அளப்பாpய தோற்கருவி’
(தென்னாட்டுக் கலைகள், 43-57)
என்று குழல் இசைக்கருவி, நரம்பிசைக் கருவி, தோல் இசைக் கருவி ஆகிய கருவிகளை நம் முன்னோர் படைத்த விதம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நாட்டியக்கலை:
ஆடலும், பாடலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போன்று ஒன்றுக் கொன்று மிகுந்த தொடர்புடையன. நாட்டியக்கலையின் தோற்றத்தைப் பற்றிப் பாடும் கவிஞர்.
‘விண்ணில் தவழ்ந்து விளையாடும் கார்முகிலைக் 
கண்ணெதிhpல் கண்டு களித்தெழுந்த வண்ணமயில் 
தோகை தனைவிhpத்துத் துள்ளிவிளை யாடுகையில்
ஓகை மிகவாக உள்ளந்தான் துள்ளியதால்
அன்றுமுதல் ஆடுகிறான் ஆடுகிறான் அம்பலத்தே’
(தென்னாட்டுக் கலைகள், 73-77)
என்று இயற்கையிலிருந்து கற்றுக்கொண்ட பட்டறிவின் மூலம் இசைக்கருவிகளைத் தமிழர் உருவாக்கியது போல் பழந்தமிழர் ஆடற்கலையையும் இயற்கையிலிருந்தே கற்றுக் கொண்டனர் என்று கவியரசர் சுட்டிக் காட்டுகிறார்.  
‘செஞ்சொற் சிலம்பு’ என்னும் கவிதையில் சிலப்பதிகாரம் நாட்டியல் நூல் என்பதற்கு அரண் சேர்க்கும் வகையில்
கூத்தும் இசையுங் குறிக்கும் இயல்பனைத்தும்
பாத்துப் பகர்ந்தணிசேர் பாவில் அரங்கேற்றும் ; 
அன்பின் விளைந்த அகப்பொருளின் நற்றுறைகள்
இன்பில் அமைந்தங் கிடையிடையே கொஞ்சிவரும்
(செஞ்சொற் சிலம்பு, 55-58)   
என்று நாட்டிய அரங்கேற்றம் பற்றிப் பாடுகிறார்.
கட்டடக்கலை:
நம் தமிழர்களின் கட்டக்கலை உலகப் புகழ் பெற்றதும் கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குவதும் ஆகும். கட்டடக்கலையின் நுணுக்கத்தைக் கவியரசர் ‘வான முகட்டில் ஏறுவதற்கு ஏணிவைத்து வழி சமைத்தது போல் தோன்றுகின்ற கோபுரங்கள், மாடங்கள், மாளிகைகள், மாற்றுயர்ந்த பொன் வேய்ந்த கூடங்கள், கொற்றவர்கள் கூடும் அரண்மனைகள், யானைப்படை சென்று வரும் அகன்ற உயாpய வாயில்கள், பகைவர்கள் புகமுடியாத பொpய மதில்கள் என இவையனைத்தும் தமிழர்களின் கட்டட நுண்கலைக்குச் சான்றாகும்’ என்று கவியரசர் குறிப்பிடுகிறார். தஞ்சை பொpய கோவிலின் கட்டடக்கலையைக் கண்டு வியப்புறும் கவிஞர்
‘விஞ்சும் எழிலால் வியப்பு+ட்டும் கோபுரத்தைத் 
தஞ்சைப் பெரும்பதியில் தந்தமன்னன் சாய்ந்துவிட்டான்
ஆக்கிப் படைத்தானே அன்னவனும் சாய்ந்து விட்டான் ;
தேக்குபுகழ் மட்டும் தினையளவும் சாயவில்லை ;
கோபுரத்தில் காணும் கொடுமுடியின் தன்னிழலும்
ஓர்புறமும் சாயவில்லை ; ஒப்பில்லை இக்கலைக்கே
(தென்னாட்டுக்கலைகள், 33-38)
என்று கட்டடக் கலை நுட்பத்தை வியந்து பாடுகின்றார்.
நெய்தற்கலை:
உழவும், நெசவும் பன்னெடுங்காலமாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொழில்கள் ஆகும். உழவு நம் உயிர் காப்பது; நெசவு நம் மானம் காப்பது. உயிரையும், மானத்தையும் காத்த தொழில்கள் உலகமயமாக்கலில் நசிந்துவரும் சு+ழலில் எத்தனை இடர்வந்தாலும் அவற்றை வழிவழியாய்ச் செய்துவரும் தமிழர்களைப் பாராட்டும் கவிஞர்
பாலாவி என்றிந்தப் பாரோர் புகழ்ந்தேத்த
நூலாலே ஆடை நொடியிற் படைத்திருந்தோம் ;
பாவோ டிழையாடப் பஞ்சாலும் பட்டாலும்
ஓவா துழைத்தே உயர்ந்த கலைகண்டோம் ;
நெய்தற் கலையாவும் நெய்தல் உhpப்பொருளாய்
எய்தாமல் இன்றும் இயக்கி வருகின்றோம்
(தென்னாட்டுக்கலைகள், 93-98)
என்று நெய்தலின் உhpப்பொருளான ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ நெய்தல் கலை அடைந்துவிடாமல் நெய்தல்கலையைக் காத்துவரும் நெசவுத் தொழிலாளர்களைப் பாராட்டுகிறார்.
இலக்கியக்கலை:
‘நுணுக்கமும் அழகுங்கொண்டு உள்ளத்தைத் தன் வயப்படுத்துவதெல்லாம் கலை என்றால் கவிதையும் அதனுள் அடங்குவதுதான். படைப்பிற்குப் பின்னும் தன்னை நுகர நுகர அழகு வளர்பிறை போல் வளர்ந்து செல்லும் கவிதை போன்ற கவின் பொருள்களின் படைப்பு முறையைக் கலை என்று தான் சொல்ல வேண்டும்’ என்பர் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி (கவிதைக்கலை, வள்ளுவர்பண்ணை, மார்ச்சு 1962, ப.66) அத்தகைய கவிதைக்கலையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது
கல்லைக் கலையாக்கிக் காடெல்லாம் வீடாக்கிச் 
சொல்லிற் சுடரேற்றிச் சொல்லாpய காவியமென்
றாக்கிப் படைத்தான், அருங்கலைகள் ஆற்றலெலாம்
தேக்கிப் படைத்தான், தெளிதமிழின் பெட்டகம்போல் 
காதல் சுவைத்திருக்கக் கண்டான் அகமென்று ;
மோதும் பகைக்களத்து மூள்வோர் புறங்கண்டான் ;
தீது சிறிதுமிலாத் தென்னாட்டான் நம்நாட்டான்
ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கி நலம்
தோயும் படிவாழ்வைத் துய்த்திருந்தான்;
(தென்னாட்டுக் கலைகள், 99-108)
என்று அகவிலக்கியம், புற இலக்கியமென்று வகைமை பிhpத்து இலக்கியக் கலை படைத்து வாழ்ந்த தமிழாpன் கலை, பண்பாட்டுச் சிறப்பைப் போற்றுகிறார் கவியரசர் முடியரசனார்.
முடிவுரை:
கவியரசர் முடியரசனாரின் ‘தமிழ் முழக்கம்’ நூலில் மட்டுமன்றி அவர்தம் படைப்புகள் அனைத்திலும் பண்பாட்டு, கலைச் சிறப்புகள் குறித்த கருத்துகள் விரவியுள்ளன. பழந்தமிழகத்தின் பண்பாட்டுச் சிறப்புகளை, கலைநுட்பங்களை மறுபதிவு செய்யவேண்டும் ; மீட்டெடுக்க வேண்டும் ; அழிந்துபோக விடாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்ற கவியரசர் முடியரசனாரின் வேண்டுகோளுக்கு செவிமடுப்போம். கலை, பண்பாட்டைக் கண் போல் காத்து நிற்போம்.  

   கவியரசர் முடியரசனாரின்  வள்ளுவர் கோட்டத்தில்     பொதுவுடைமை
முகவுரை:
பாவேந்தர் பாரதிதாசனாரால் ‘தன் மூத்த வழித் தோன்றல்’ என்றும்,  ‘தனக்குப் பிறகு  கவிஞன்  என்றும்  பாராட்டப் பெற்ற  கவியரசர்  முடியரசன்  தம் வாழ்நாள்  முழுமையும்  வள்ளுவ நெறிப்படி  வாழ்ந்த  பெருந்தகையாளர்.  அவர்  கவியரங்கப்  பாடல்களும்,  தனிப் பாடல்களுமாக  வள்ளுவம் பற்றிப்  பாடிய  பாடல்களின்  தொகுப்பே  ‘வள்ளுவர் கோட்டம்’  என்ற  நூல்.  கவிஞர்  அந்நூலின்  முன்னுரையில்  ‘தண்ணீர் மேல்  மட்டத்திலேயே  தோன்றிக்  காட்சி இன்பம்  தரும் தாமரை  மலர் போன்று  மேலோட்டமாகப் பயில்வார்க்கு  இன்பம்  பயப்பனவும்  இந்நூலுள் உண்டு.  நீந்திக்  குளிப்பார் பெறும்  இன்பம் போல,  இறங்கி  நீந்துவாரும்  இன்பம்  மாந்திக்  களிப்பர். மூழ்கி  எழுவார், உயரிய  பொருள்கள்  பெற்றுத் துய்த்தலும்  ஆகும்’  என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில்  கவிஞரின்  வள்ளுவர்  கோட்டத்தில்  ‘பொதுவுடைமை’  என்னும்  முத்து  சேகரிக்க  மூழ்கி  எழுந்த  முயற்சியே  இக்கட்டுரை.
பாட்டுப்  பரம்பரையில்  பொதுவுடைமை:
கவியரசர்  முடியரசனார்  தமிழ்க்  கவிதா  மண்டலத்தில்  மகாகவி  பாரதியாரைத்  தன் பாட்டனாராகவும்,  புரட்சிக்கவி பாரதிதாசனாரைக்  தன்  தந்தையாகவும்  கருதி  வாழ்ந்தவர் ஆவார்.  
பழந்தமிழ்  இலக்கியங்களில்  பரவலாகக்  காணப்பட்ட  பொதுவுடைமை  எண்ணங்கள்  இடைக்காலத்தில்  நீறு பூத்த  நெருப்பாகத்  தணிந்து, பின் பாரதி காலத்திலிருந்து  மீண்டும்  கனன்றெழுந்து புதிய  வீச்சோடு  பரவத்  தொடங்கியது.
பாரதி  விடுதலை  வேட்கையோடு பாடிய  காலத்தில்  பொதுவுடைமைக்கும்  உரிமைக்குரல்  எழுப்பினார்.
‘முப்பது  கோடி  சனங்களின் சங்க
முழுமைக்  கும்பொது உடைமை
ஒப்பிலாத  சமுதாயம்
உலகத் துக்கொரு  புதுமை? ’  என்னும் பாடலில்  ‘பொது உடைமை’  என்ற சொல்லாட்சியைக்  கவிதையில்  முதலில்  பயன்படுத்தி  பொதுவுடைமைக்கு  புதிய  முகவுரை தந்தார்.  பாரதி வழிவந்த  பாரதிதாசனும்,
பொதுவுடைமைக் கொள்கை  திசையெட்டும்  சேர்ப்போம்
புனிதமோ  டதை எங்கள் உயிரென்று  காப்போம்
இதுஎன  தென்னுமோர் கொடுமையைத்  தவிர்ப்போம்
உணர்வெனும்  கனலிடை  அயர்வினை  எரிப்போம்
ஒரு  பொருள்  தனிஎனும்  மனிதரைச்  சிரிப்போம்
என்னும்  கவிதையைப் போன்று  பல  வீறுமிக்கப் பாடல்களை எழுதி  பொதுவுடைமைப்  புரட்சி செய்தார்.  பாரதிதாசன் பரம்பரையில்  தோன்றிய  கவிஞர்கள்  பலரும்  பொதுவுடைமைப்  பாடல்கள்  பாடுவதில்  தணியாத தாகம்  கொண்டு  பொதுவுடைமைக்  கருத்துகளைப்  பரப்பினர்.  அவ்வகையில்  கவியரசர்  முடியரசனாரும்
பாடிடு  வேன்புது  வுலகை அங்கே
படைத்திடு  வேன்பொது  வுடைமை
சாடிடு  வேன்வரும்  படையைத்  தாக்கிச்
சமர்புரி  வேன்அது  கடமை (பாடுங்குயில்,  ப. 128)
என்று  பாடி பாரதிஇ பாரதிதாசன்  பாட்டுப்  படையில்  முன்னிற்கும்  பொதுவுடைமைப்  போர்த்  தளபதியாய்க் கவியரசர்  காட்சியளிக்கிறார்.
வள்ளுவர்  கோட்டத்தில்  பொதுவுடைமை:
நாம் பயணிக்கும்  வாழ்வுப்  பாதையில்  இரு கிளை  வழிகள்  இருப்பதாகக்  கவிஞர்  குறிப்பிடுகிறார்.  அருள் என்னும்  பெருவேந்தன்  ஆட்சி  செய்யும்  அறிவுலகைப்  பொதுமை நலம் பூத்துநின்று  பரவுகின்ற  புத்துலகைக் காண  எண்ணிப்  பரிவுடனே  விரைந்து  செல்கின்ற  நம் முன்  இரு வழிகள்  கிளை  வழிகளாகப்  பிரிந்து  செல்கின்றன.  அதில்  ஒரு வழி  மனு வழி.  மற்றnhரு வழி  பெருமை மிகுந்த  ‘தமிழ்’ வழி.  இவ்விரு  வழிகளில்  வள்ளுவப்  பேராசான்  தம் உலகப்  பொதுறை  நூலின்  மூலம்  நல்வழியாகிய  தமிழ்வழி  செலுத்துகின்றார்.  வள்ளுவர்  கூறும்  பொதுவுடைமை  வழியில்  சென்றால்  நமக்கும்,  நாட்டுக்கும்  அது நலம்  பயக்கும்.  மனு  வழியிற் சென்றால்  கொடுந்  தீமைகளே  வந்து சேரும் (குறள் மனிதன் குறிக்கோள்,  ப. 37) என்று  வழிகாட்டுகின்றார்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற  நெறியை  மக்கள் அனைவரும்  நாடாவிட்டால் ‘ஒற்றுமை இங்கு  உருப்படுமா?  மக்களுக்குள்  பற்றுள்ளம்  தோன்றிப்  பரவிடுமா? ‘ என்று  வினா  எழுப்புகின்ற  கவிஞர்  வள்ளுவர்  இன்று  வந்தால்  குமுகாயத்திலுள்ள  ஏற்றத்  தாழ்வுகளைக்  கண்டு  வருந்தும் நிலையைக்  கற்பனை  செய்து  பாடுகிறார்.
‘மஞ்சு தவழ்ந்து  வரும் மாடமனை  ஓர்புறத்து
விஞ்சும்  எழில் தாங்கி  வீறுபெற  நின்றிலங்கும்
ஓடென்றுங்  காணா  தொழுகுஞ்  சிறுகுடில்கள்
வீடென்ற  பேரால்  விளங்கும்  மறுபுறத்தே
மேடென்றும்  பள்ளமென்றும்  மேலென்றுங்  கீழென்றும்
நாடின்னும்  சொல்லி  நடப்பதெலாங் கண்டிடுவான்
கண்டால்  வெகுண்டு  கவியைக்  கணையாகக்
கொண்டே  உலகைக் கொளுத்தும் நிலைபெறுவான்
எல்லாரு  மிந்நாட்டு மன்னரெனச்  சொன்ன பினும்
பொல்லா  நிலையைத்தான்  பொய்யா மொழி  காண்பான்
இந்நாட்டு  மன்னர் இரந்துமுயிர் வாழ்வதுபோல்
எந்நாட்டுங்  காணா இயல்பதனைக்  காணுங்கால்
வெம்பித்  துடிக்காமல்  வேறென்ன  செய்திடுவான்
அம்புவியைத்  தந்தோன்  அமைத்ததிது  வென்றால்
படைத்தவன்  இங்கே  பரந்தொழிக  என்றே
வெடுக்கென்று  கூறாமல்  வேறென்ன  பேசிடுவான்? ‘
(வள்ளுவர் இன்று  வந்தால்.. , பக். 61, 62)
என்று  வள்ளுவரின்  சீற்றத்தை  நம் கண்முன்  கொண்டுவரும்  இக்கவிதையில்  குமுகாய  அவலத்தைக்  கண்டு  கொதித்தெழுகின்ற  வள்ளுவரின்  மறுவுருவாகவே  கவிஞர்  தென்படுகிறார்.
‘தனியொருவனுக்கு  உணவிலை யெனில்
ஜகத்தினை  அழித்திடுவோம்’ என்றும்,
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்றும்இ ‘பாரத சமுதாயம்’ பாடிய  பாரதியில்  வள்ளுவரையும்,
‘இரந்து முயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக  உலகியற்றி யான்’  என்று  பாடிய  வள்ளுவரில்  பாரதியையும்  காணுகின்ற  கவிஞரின்  உள்ளம்  நினைந்து  போற்றுதற்குரியது.
பொதுவுடைமை காணும் வழி:
சாதிகளை  ஒழித்தால்தான்  பொதுவுடைமைக்  குமுகாயம்  செழித்தோங்கும்  என்பதில்  உறுதியான  எண்ணம்  கொண்டிருந்தார் முடியரசனார்.  ‘சாதிகளை  ஒழித்து  எல்லோரும்  ஓரினமாய்ப்  பொதுமையுணர்வோடு வாழும்  போதுதான்  குமுகாயம் உயரும் வள்ளுவருக்கும்  மகிழ்வு  தோன்றும்’ (சாதிப்போர், ப. 17)  என்றுரைக்கின்றார்.  எல்லோரும்  ஓரினமாய்ப்  பொதுவுடைமைப்  பண்போடு  வாழ சாதிகளை  ஒழிப்பதோடு  மட்டுமன்றி  அன்பு நெறியும்  பரவ  வேண்டுமென்பதை
மற்றோரை  வாழ்வித்துத்  தாமுமிங்கு வாழுமனம்
அறறோh;பால்  நெஞ்சுருகும்  அன்புநெறி  காண்பதெங்கே
அன்புநெறி  இல்லையெனில்  ஆருயிரைத்  தன்னுயிர்போல்
எண்ணும்  அருள்நெறிதான் எங்கே தழைத்து வரும் (கனவின் நிழல், ப. 21)
என்று  அன்புநெறியின்  அவசியத்தை  வலியுறுத்துகின்றார்.
பொதுமை காட்டும்  பொதுமறை:
‘பொதுநூல்’ என்னும்  பாடலில் திருக்குறள்  எத்தன்மையது  என கவிஞர்  குறிப்பிடும்பொழுது  சமயங்கள் எல்லாம்  புகன்ற  உயர்ந்த  அருள் நெறியும், நெஞ்சைக் கனிவிக்கும்  நேர்மைமிகு  ஆத்திகமும்,  நெஞ்சத் துணிவுரைக்கும்  நேரில்லா  நாத்திகமும்  கூறும்  வாழ்க்கைத்  துணை நூல்  என்று  போற்றுகின்றார். மேலும்,
என்றுவரும்  என்று வரும் என்றே  எதிர்நோக்கி
நின்றுலகம்  நோக்கும்  நிலைத்த  சமத்துவமும்
எல்லாப்  பொருளும்  இதன்பால்  உளவென்று
நல்லோர் புகழ்ந்துரைத்த  நல்ல திருமறைநூல்
சாதி கடந்து  சமயத்திற்  கப்பால் நின்
றோதும்  உயரறநூல்  ஒற்றுமையைச் சீர்குலைக்கும்
பொல்லா  அரசியற்குப்  போகாத்  தனிப்பெரு நூல்  ( பொதுநூல், ப. 27)
என்று  பொதுமை காட்டும்  பொதுமறைக்கு  புகழ்மாலை  சூட்டுகின்றார்.
சிறந்த  உடைமை:
இன்றைய  சூழலில்செல்வமென்றால்  பெரிய  மாட மாளிகை,  விளை நிலங்கள், பெரும் நிதி, மணி, பொன் போன்றவற்றால்  செய்த  அணிகலன்கள்,  விலையுயர்ந்த  ஊர்தி இவை  போன்று  இன்னும்  எதை எதையோ உடைமை  என்று  நாட்டில்  பெறுவதற்குத்  துன்புறுகிறோம்.  இவைதான்  நாம்  தேடவேண்டிய உடைமையென்றெண்ணி  அவற்றைப்  பெறுவதற்கு அலைந்து  திரிந்து  தந்திரம், வஞ்சனை, பொய்ம்மை என்று  எவற்றையெல்லாம் செய்தேனும்  வளமோடு வாழ  ஏங்குகின்றோம்  பிறர் உயிரை  வாங்குகின்றோம்.  பிறரோடு சண்டையிட்டு  உடைமைகளைத்  தேடுகின்றோம் என்று  உள்ளம் வெதும்பும் கவிஞர்,
எல்லாமே  தனக்குரிமை என்று  நாளும்
ஏப்பமிடுந்  தனியுடைமை  யுலக  மொன்றாம்
இல்லாமை  யில்லாமற்  செய்து காக்க
எல்லார்க்கும்  பொதுவாகும்  உடைமை என்று
மல்லாடும்  பொதுவுடைமை  உலகம்  ஒன்றாம்
(வள்ளுவர்கண்ட உடைமைகள், ப. 42)
என்று  உலகின்  இருவேறு  நிலைகளைக் காட்டுகின்ற  கவிஞர்,
தென்னகத்தே  தோன்றியநல்  லுரிமை  தன்னால்
தீந்தமிழ்க்குத்  தனியுடைமை  யாகி நின்று
மன்னுயிர்க்கே  பொதுமையறம் உரைப்ப தாலிம்
மாந்தர்குலப்  பொதுவுடைமை யாகி விட்ட
தன்னிகர்த்த  திருக்குறள்நூல் வகுத்த மைத்துத்
தருகிற  உடைமையெலாம்  மறந்து விட்டோம்
பொன்னினைத்தே  மண்ணினைத்தே  மயங்கி  நின்று
போராடித்  திரிகின்றNhம் பகைமை  கொண்டோம்
(வள்ளுவர்கண்ட உடைமைகள், ப. 42)
என்று  வள்ளுவர் காட்டும் உடைமைகளான  அன்புடைமை, அறிவுடைமை,  அடக்கமுடைமை,  ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை, நாணுடைமை, பொறையுடைமை ஆகியவற்றைத் தேட வேண்டுமென்று  குறிப்பிடுகின்றார்.
வள்ளுவர் சொல் லுடைமையெலா மவ்வ வர்க்கு
வாழ்வளிக்குந்  தனியுடைமை  யாகுங்  கண்டீர்!
வௌ;ளமெனச்  சேர்ந்துறையும்  மன்ப தைக்கு
விழவுதரு  பொதுவுடைமை  யாகுங்  கண்டீர்.
(வள்ளுவர்கண்ட உடைமைகள், ப. 45)
என்று வள்ளுவர் உரைத்த  உடைமைகள்  பத்தும்  மனிதர்கள்  அனைவருக்கும்  பொதுவுடைமைச் செல்வம்  என்று  சுட்டிக் காட்டுகிறார்.
நிறைவுரை:
இக்கட்டுரை குறிப்பிடுவது போல் வள்ளுவர்  வகுத்தளித்த  வான்புகழ்  வள்ளுவம்  காட்டும்  பொதுவுடைமைப்  பாதையில்  மனித குலம்  சென்றால்  வளமும்,  நலமும்  மிகுந்த  வாழ்வும்,  நாடும்  அனைவருக்கும்  கிட்டும்  என்பதை  கவியரசர் தன்  வள்ளுவர் கோட்டத்தின் வழி  வலியுறுத்துகிறார்.

                                               தமிழர் திருநாள் பட்டிமன்றம் - 2017

திங்கள், 16 ஜனவரி, 2017

நெருநல்

                                 மரபின் வேரிலிருந்து...


கவியரசர் முடியரசனாரின் கடிதவிலக்கியத்தில் பண்பாட்டுக் கூறுகள்

                                                ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்,

                                           முனைவர் பட்ட ஆய்வாளர்,

                                           அழகப்பா பல்கலைக்கழகம்,

                                           காரைக்குடி.

முகவுரை:

      பழந்தமிழரின் பண்பாட்டுத் தளங்களிலிருந்து தடம் மாறாமல், மரபு மீறாமல் மூடப்பழக்க வழக்கங்களை முட்டறுக்கவும், மொழி-இனம் நலன் காக்கவும், தமிழ்க் குமுகாயம் மறுமலர்ச்சி பெறவும் தம் வாழ்நாள் முழுதும் இனவெழுச்சிப் பாடல்களைப் பாடியதோடு, அவற்றைத் தம் வாழ்விலும் கடைபிடித்த தமிழியப் புரட்சிக் கவிஞர் கவியரசர் முடியரசனார் ஆவார். கவிதை, காப்பியம், கட்டுரை, சிறுகதை, கடிதம் எனப் பல்வேறு படைப்பு வடிவங்களில் தமிழ்ப் பண்பாட்டைக் காக்க முனைந்த பண்பாளர். அவர் படைத்த கடிதவிலக்கியத்தில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

முடியரசனாரின் கடிதவிலக்கியம்:

      வெளியூரில் தங்கிப் பயிலும் இளவரசன், பாண்டியன் ஆகிய இரு மகன்களைக் கடிதம் வழி நெறிப்படுத்தும் ஒரு தந்தையாகக் கவியரசர் முடியரசனார் ‘அன்புள்ள இளவரசனுக்கு’, ‘அன்புள்ள பாண்டியனுக்கு’ என்னும் இரு கடிதவிலக்கிய நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘அன்புள்ள பாண்டியனுக்கு’ நூலின் முதல் கடித முன்னுரையில் இக்கட்டுரையின் நோக்கத்தினையே அவரும் வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தில் “நம் நாட்டின் பண்பாடுகள் இன்று நேற்றுத் தோன்றியவையல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்று தொட்டுத் தொடர்ந்து வருவன் உலக மக்கள் அனைவராலும் பாராட்டிப் போற்றப்பட்டு வருவன் இன்று நாகரிகம் மிக்க நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள், பண்பாடு இன்னதென அறியாக் காலத்திலேயே, இங்குத் தோன்றி வளர்ந்து வந்த பெருமையை உடையன. அத்தகைய பண்பாடுகள் இன்று நாளுக்கு நாள் அருகிவரும் நிலையைக் காணுகின்றேன். அவை மீண்டும் தழைத்து வளர வேண்டுமென்ற ஆர்வத்தால், பண்பாடுகளை வளர்க்கத்தக்க கடிதங்களையே இனியெழுத விரும்புகிறேன” என்று அவர் குறிப்பிட்டிருப்பது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அரண் சேர்க்கிறது, கவியரசர் முடியரசனார் ‘அன்புள்ள பாண்டியனுக்கு’ கடிதவிலக்கிய நூலின் 15 கடிதத் தலைப்புகளையும் ஏவல் சொற்றொடர்களில் அமைத்து, நிறைவில் தலைப்புகளுக்கேற்ற குறட்பாவோடு முடித்திருப்பது தனிச் சிறப்பு.

அன்பும், அறனும்:

      ‘அன்பாய் இரு’, ‘அறஞ் செய்ய விரும்பு’ என்னும் முதலிரு கடிதங்களில் தமிழர் அன்புள்ளம் கொண்டோராய், நல்லறங்களைச் செய்து வாழ வேண்டுமென்று விழைகின்றார்.   குடும்ப வாழ்க்கைக்கு மட்டுமன்றித் குமுகாய வாழ்க்கைக்கும் அன்பு கட்டாயம் வேண்டப்படுவதாகுமென்றும், கூட்டு வாழ்க்கைக்கு அன்பே சிறந்த துணை என்னும் வலியுறுத்துகின்றார். ஒருவன் முழுமை பெற்றவனாக விளங்க, வாழ்வில் சிறந்து செழித்து வளர, குமுகாயத்தில் கூடி வாழ, தன்னலமற்ற பொதுநலம் பேண அன்புடையவராக நாம் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

      ‘சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

     அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல’

என்று புறநானூறு புகல்வதைப் போன்று அறத்தால் வரும் இன்பமும், பொருளுமே சிறந்தவை என்று மேற்கோள் காட்டுகிறார். இயன்றளவு அறத்தினை இடைவிடாது செய்ய விரும்பவேண்டும், அறத்தைப் போல உற்ற துணை, அழியாத் துணை மற்றொன்றில்லை என்றுரைக்கும் கவிஞர் இப்பருவத்திலே இவ்வளவுஞ் செய்துவிட முடியுமோ என்று மலைக்க வேண்டாம். அதனால்தான் அறஞ்செய் என்றுஎழுதாமல் அறஞ்செய்ய விரும்பு என்றெழுதியதாகக் குறிப்பிடுகிறார். ‘மனத்தால் நினைப்பதுவும் செய்வதற்கு நிகராகும்’ என்றுரைக்கும் வள்ளுவத்தின்று முதலில் மனத்தால் விரும்பவேண்டும். விருப்பம் வளர வளரப் பருவமும் வளரும். வளர்ந்த பின்னர், அது செயலுருவம் பெறும். எனவே, மாணவப் பருவத்திலேயே அறஞ்செய்ய வேண்டுமென்று ஆசையை வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றார்.

இணக்கம் அறிந்து உண்மை விளம்பல்:

      ‘இணக்கம் அறிந்து இணங்கு’ என்ற கடிதத்தில் இனிய நட்பிற்கும், கூடா நட்பிற்கும் வேறுபாடுரைக்கும் முடியரசனார் நல்லோரை ஆராய்ந்தறிந்து, உண்மை நட்பின் இயல்பையுணர்ந்து, போலி நட்பின் இயல்பைப் புரிந்து, வேண்டும் நட்பை விரும்பி, வேண்டா நட்பை விலக்கி வாழ வேண்டுமென்றுரைக்கிறார்.

      ‘உண்மைவிளம்பு’ என்னும் கடிதத்தில் ஏனைய அறங்களைச் செய்யாவிடினும் குற்றமில்லை; பொய்யாமை என்னும் அறத்தைச் செவ்வனே கடைபித்து ஒழுகினாலே போதும், ஏனைய அறங்கள் தாமே வந்தெய்தும் இத்தகைய தலைசிறந்த அறத்தைக் கைக்கொண்ட நம் சான்றோர் ‘பழியெனில் உலகுடன் பெறினுங் கொள்ளாதவராகி’ (புறநானூறு) வாழ்ந்தனர். அவர்கள் வழிவந்த நாமும் எத்தகைய துன்பம் வரினும் உண்மையையே விரும்ப வேண்டும். உண்மையையே விளம்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஒழுக்கமும், ஒப்புரவும்:

      ‘ஒழுக்கம் கைக்கொள்’ என்னும் தலைப்பிலான கடிதத்தில் ‘ஒழுக்க நெறிகளைக் கற்றலாவது, அவற்றை இடைவிடாது பழக்கத்திற் கொணர்தலாகும். அறநூல்கள் கூறும் நெறிகளிலும், சான்றோர் ஒழுகிய நெறிகளிலும் இக்காலத்திற்குப் பொருந்தாதனவற்றை நீக்கிப் புதிய நெறிகளிற் பொருந்துவன கொண்டு நடத்தலே ஒழுக்கம் எனப்படும்’ என்று ஒழுக்கத்திற்கு அரியதொரு விளக்கம் தருகின்றார்.

      நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்

      என்றும் இடும்பை தரும்.

என்னும் குறட்பாவில் வள்ளுவர் நல்லொழுக்கத்தை வித்தென்றும், தீயொழுக்கம் இடும்பை தரும்’ என்று குறிப்பிட்டதற்கு கவிஞர் நுட்பமான பொருளுரைக்கின்றார். ‘நிலத்தில் ஊன்றிய வித்து உடனே கனி பயந்து விடுவதில்லை. அது முளைவிட்டுச் செடியாகி, மரமாகிப் பூத்துக் காய்த்துப் பின்னரே கனி தருகிறது. அது போலவே நல்லொழுக்கமும் உடனே இன்பம் பயவாது. காலஞ் செல்லச் செல்லப் பயன்தரும். அதனால்தான் வள்ளுவர் அதனை ‘வித்து’ என்றுரைத்துள்ளார். ஆனால் தீயொழுக்கம் அவ்வாறன்று, கால நீட்டிப்பின்றி உடனே பயன்தந்துவிடும். இதனையுணர்த்தவே வள்ளுவர் தீயொழுக்கத்தை வித்தென்று உருவகம் செய்யாது ‘இடும்பை தரும்’ என்ற அளவிற் கூறினார்’ என்று நுண்பொருள் தருகிறார். உடனே துன்பம் பயக்கும் தீயொழுக்கத்தை விடுத்து, காலஞ்செல்லச் செல்ல மிகுந்த பலனளிக்கும் நல்லொழுக்கத்தை கைக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.

      ‘ஒப்புரவொழுகு’ என்னும் கடிதத்தில் ஒப்புரவு என்னும் சொல் தன்னைப் போலப் பிறரையும் ஒப்பாக - ஒன்றாகக் கருதி வாழ வேண்டும் என்றுணர்த்துகிறதென்றும், வள்ளுவர் ஒப்புரவாளனுக்குக் குறிப்பிடும் ஊருணி, பயன்மரம், மருந்துமரம் போன்ற உவமைகளைப் போன்று பிறர் இடர்தரினும், இழிமொழி கூறினும் அக்குறை நோக்காது, உடல், பொருள், உயிர் ஆகிய அனைத்தாலும் பயன்பட வாழ்ந்திட வேண்டுமென்று ஒப்புரவின் மேன்மையை எடுத்துக் காட்டுகின்றார்.

நன்றி மறவாமையும், நா நலமும்:

      ‘நன்றி மறவேல்’ என்னும் கடிதத்தில் காலத்திற்செய்த உதவி, கைம்மாறு கருதாது செய்த உதவி, காரணமின்றிச் செய்த உதவி ஆகியவற்றின் நம்மை உலகை விட, கடலை விட, வானை விடப் பெரியனவாகும், சூழ்நிலைகளுக்கும், தன்னலத்திற்கும் இடங்கொடாது செய்ந்நன்றியுறியும் வல்லானை இவ்வுலகம் என்றும் ஏத்திப்புகழும்; என்றுரைக்கும் கவிஞர், கைம்மாறு கருதாமல் துரியோதனன் செய்த நன்றிக்காகப் போர்க்களத்திலே தன்னுயிரையும் கொடுத்த கன்னனின் நன்றிமறவாப் பண்பை நினைவுப்படுத்துகிறார்.

      ‘நா நலம் நாடு’ என்னும் கடிதத்தில் ஒருவர் பேசும்பொழுது அவையத்திலே உள்ளவருடைய குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், பருவம் முதலிய தகுதிகளை அறிந்து அவற்றிற்கேற்பப் பேச வேண்டுமேயன்றி அவையோர் கொண்டுள்ள கருத்திற்கேற்பத் தம்கருத்தை விட்டொழித்து உண்மைக்கு மாறாகப் பேசிவிடக்கூடாது. எங்கும், எப்பொழுதும், எச்சூழ்நிலையிலும் தம் கருத்தை விடுத்துப் பிறர் கருத்தினர் பின்னே செல்லுதலைச் சான்றோர் விரும்பார். அவையறிதல் என்பது அவையோர் நெஞ்சம் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துகளை அவரவர் புரிந்து கொள்ளத்தக்க நடையில் பேச வேண்டுமென்பதாகும் என்றுரைக்கின்றார். நாநலம் நாட்டின் உயர்வுக்கும், மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படவும், நம் பண்பாட்டைக் காக்கும் பெருந்துணையாகுமாறு அமைத்துக் கொள்ள வேண்டுமென்று குறிப்பிடுகிறார்.

பணிவும், மானமும்:

      ‘பணிவுடன் பழகு’ என்னும் கடிதத்தில் கல்வியும், புகழும் வளர வளர செருக்குணர்வும் வளர்ந்து கொண்டே வரும். நாம்தாம் விழிப்பாக இருந்து அவ்வுணர்வை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும். அதனைக் கிள்ளியெறிந்தால் தான் பணிவென்னும் நல்லுணர்வு தளிர்த்துச் செழித்து வளரும். எனவே செருக்கை அடியோடு ஒழித்துக்கட்டி, பணிவுடன் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்விற் சிறந்து விளங்க மெய், நா, மனம் இம்மூன்று அடக்கங்களும் இன்றியமையாதன என்றுரைக்கிறார்.

      ‘மானம் போற்று’ என்னும் கடிதத்தில் ‘பழியெனின், உலகுடன் பெறினுங் கொள்ளலர்’ என்று அறிவுரைக்கும் புறநானூற்று வரியையும்,

      ‘வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்

      மான மழுங்க வரின்’

என்று நவிலும் நாலடியார் வரிகளையும் சான்றுகாட்டும் கவிஞர் மானம் பெரிதா? உயிர் பெரிதா? எனில் மானம்தான் பெரிதென்று உயிரை விட்டாவது மானம் காப்பதே தமிழர் பண்பாடு, அவ்வாறன்றி பரிமேலழகர் வடநூலார் கருத்தையுரைக்கும் ‘இறப்ப வருவழி, இளிவந்தன செய்தாயினும் உய்க’ என்பது தமிழருக்குப் பெருமை தராது என்று தமிழ்ப் பண்பாட்டை உயர்த்துகின்றார்.

      மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்

     உயிர்நீப்பர் மானம் வரின்

என்ற குறட்பாவையும் சான்று காட்டி தமிழர்மானத்திற்கு வலுசேர்க்கின்றார்.

தாய்மொழி, தாயகம் போற்றல்:

      ‘தாய்மொழி பேண்’ என்னும் கடிதத்தில் தாய்மொழியைப் பேண வேண்டுமென்ற பற்றுள்ளத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தும் கவிஞர் தாய்மொழியை மறந்து, அயல்மொழிக்கே அடிமையாகி, அதற்காகப் பரிந்து பேசுகின்ற ஒருவன், தமிழனென்று தன்னைக் கூறிக்கொள்ள தகுதியற்றவனென்று வெகுண்டுரைக்கிறார். மொழிப்பற்று தான் முன்னேற்றத்தின் முதல் படி. ஆதலால் தாய்மொழியைப் பேணி, அயல் மொழிகளை அளவறிந்து பயன்படுத்தி வாழ்வதே தமிழரின் கடமை என்று வலியுறுத்துகின்றார்.   ‘தாயகம் காத்து நில்’ என்னும் தலைப்பிலமைந்த கடிதத்தில் நாடு பிடிக்கும் ஆசையால் சூழ்ந்து வரும் பகைமுடித்தல் ஒன்றுதான், தாயகத்தைக் காக்கும் தொழிலாகக் கருதக்கூடாது. தன்னலமொன்றே கருதும் சுயநலப் பாங்கினையும், காட்டிக் கொடுக்கும் கேட்டுக் குணத்தையும் அறவே ஒழித்துக் கட்டுவதும் தாயகம் காக்கும் தொழில்தான். இதுவே சிறந்த காப்பு என்று எடுத்துரைக்கின்றார். துள்ளிவரும் பகையைத் தூவென்றுமிழ்ந்து, தள்ளிவிடும் மனநிலையைப் பெற்றவராய்த் தாயகத்தைக் காத்து நிற்கும் தறுகண்மை உற்றவராய் வாழ்ந்து, நானிலம் போற்ற வளர்ந்து நிற்போமென்று வேண்டுகோள் விடுக்கின்றார். மேலும் ஓதுவதொழியேல், சோம்பித்தியேல், கேள்வி முயல் போன்ற கடிதங்களிலும் கற்றபடி நிற்கவும், சோம்பலைத்; தவிர்க்கவும், வினாக்களைத் தொடுத்து அறிவைப் பெருக்கவும் வழிகாட்டுகின்றார்.

நிறைவுரை:

      பழந்தமிழரின் பண்பாட்டை மறந்து, மனம் போன போக்கில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று திசைமாறிச் செல்லும் இன்றைய நவநாகரிகயுகத்தில் வாழும் தமிழர்க்கு நம் பண்பாடு இன்னதென்று பாடஞ்சொல்லிப் பண்படுத்துவனவாய் முடியரசனாரின் கடிதங்கள் அமைந்துள்ளன. நம் தமிழ்ப் பண்பாட்டை மீட்டெக்க அதற்குத் தடையாய், முரணாய் நிற்பனவற்றை மோதித் தகர்க்கின்ற படைக்கலன்களாய் கவியரசர் முடியரசனாரின் கடிதங்கள் இலங்குவதை நம்மால் உணர முடிகின்றது.